மாணவர்களுக்கான கருத்தரங்குகள் !

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பிரத்தியேகமான கருத்தரங்குகளை நடாத்துவதன் மூலம் பரீட்சைக்கான மேலதிக தயார்படுத்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் கருத்தரங்குகள் அவர்களுக்கான ஊக்குவிப்பாகவும் அமையும். அந்த வகையில் களுதாவளை மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 120 மாணவர்களுக்கான தமிழ் மற்றும் கணித பாட கருத்தரங்குகளும் அம்பிளாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள கலைமகள் மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் பயிலும் 40 மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்திற்கான கருத்தரங்கும் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக உதவி புரிந்த…

மேலும் படிக்க

அறநெறி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் !

தற்போதைய மாணவர் சமுதாயத்திற்கு பாடசாலைக் கல்வியை மட்டுமல்லாது ஒழுக்கம் மற்றும் விழுமியப் பண்புகளையும் போதிப்பதன் மூலம் முறையான பிரஜைகளை உருவாக்க முடியும். அதன் பிரகாரம் அறநெறிப் பாடசாலைகள் அவ்வாறான ஒழுக்க விழுமியப் பண்புகளைப் போதித்து வருகின்றன. அதற்கிணங்க அப்பாடசாலைகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்குவது எமது கடமையாகும். அந்த வகையில் ஆரையம்பதியில் அமைந்துள்ள மாவிலங்கத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள அறநெறி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கும் செயற்பாடானது மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. 80…

மேலும் படிக்க

களம் அமைப்போம்..

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையை வழங்கும் வண்ணம் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தினூடாக எமது சமுதாயத்தின் தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டிற்கான தனது பங்களிப்பை வழங்கிவருகின்றது. அந்த வகையில்எமது அறக்கட்டளையினால் அடையாளம் காணப்பட்ட சுயதொழில் முயற்சியாளரான திருமதி.தங்கமலர் கணேசராஜா அவர்களுக்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையாக முதற்கட்டமாக 30 000 ரூபாய் வழங்கப்பட்டதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டது. இச்செயற்பாடானது வாழ்வாதார ஊக்குவிப்பாக மட்டுமன்றி அவரது குடும்பத்தினர் மற்றும் மூன்று பிள்ளைகளுக்குமான கல்வி மேம்பாட்டிற்கும்…

மேலும் படிக்க

பெற்றோருடனான கலந்துரையாடல்

மனித நேயநம்பிக்கை நிதியத்தின் நிதி உதவியுடன் நடைபெறுகின்ற Office management & IT மாணவர்களுக்கான பெற்றோருடனான கலந்துரையாடல் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி கொம்மாதுறை கிளையில் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்கள் மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் முகாமையாளர் திரு.ராஜு கபீரியல் அவர்களினால் நடாத்தப்பட்டது. இப் பயிற்சியின் நோக்கம், அதன் முக்கியத்துவம் மற்றும் இப் பயிற்சியின் நிதி வழங்குனர்கள் பற்றிய விபரங்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டதோடு க.பொ.த உயர்தரத்தின் பின்னர் தமது வாழ்க்கையினை திட்டமிட்டு ஒரு சிறந்த எதிர்காலத்தினை…

மேலும் படிக்க

கல்வி மற்றும் திறன் விருதிக்காக

எமது அறக்கட்டளையின் ஒருங்கிணைப்புடன் எமது அறக்கட்டளை புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் முல்லைதீவு புதுக்குடியிருப்பில் 2 நிலையங்கள் செயற்பட்டு வருகின்றது. மாணவர்களின் வலுவூட்டலுக்காக அன்னை ஶ்ரீ சாரதா நிலையமும், இளைஞர்களின் வலுவூட்டலுக்காக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியும் செயற்படுகின்றது. அவற்றின் காலாண்டு செயற்பாடுகளை கண்காணிக்கவும், அவற்றினை மேம்படுத்தவும் எமது சமூகப்பணியாளர்களினால் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது. அன்னை சாரதா நிலையத்தில் தரம் 8 இல் இருந்து தரம் 13 வரை 60 மாணவிகள் உள்ளனர். அவர்களில் தற்போது 10 பேர் க.பொ.த சாதாரண…

மேலும் படிக்க

களத்தில் நாம் செயற்றிட்டம் 2024..

பின்தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான அடிப்படைக் கணினி அறிவு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயலமர்வுகளை நாம் நடாத்தி வருகின்றோம். அந்த வகையில் பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று அங்கு தொழில்நுட்பக்கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி இளம் சமுதாயத்தினரின் ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் அவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் பாடத்தேர்வுகளுக்கும் எமது செயலமர்வுகள் பெரிதும் உதவியாக அமையும் என்பதே எமது நோக்கமாகும். அதற்கிணங்க உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி…

மேலும் படிக்க

விழுதுகளில் ஒரு நினைவாக ..

ஆலம் விதையென வேரூன்றி இன்று ஆயிரம் விழுதுகளைத் தன்னகத்தே கொண்ட விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது தனது ஐந்தாவது ஆண்டு நிறைவினை செவ்வனே கடக்கின்றது. அதேவேளை விழுதுகளில் ஒரு நினைவாக எமது அறக்கட்டளையின் ஆறு திட்டங்களில் ஒன்றான மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் திட்டத்தினூடாக பாடசாலை மற்றும் மேலதிக கல்விசார் நடவடிக்கைகளிற்கு அதிக தூரம் செல்லவேண்டியுள்ள வறுமை நிலையில் உள்ள மாணவர்களிற்கு அவர்களின் நிலைமையினை கருத்திற் கொண்டு துவிச்சரக்கர வண்டிகள் வழங்கும் செயற்பாட்டினை மேற்கொள்ளும் முகமாக முதற்கட்டமாக மாணவி…

மேலும் படிக்க

கிராமங்களை நோக்கிய பயணங்கள்…

பாடசாலைக் கல்வியின் பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் பின்தங்கிய கிராமங்களில் தேக்கமடையும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் தூரநோக்குடன் அவர்களின் வாழ்க்கையினை திட்டமிடவும் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக காணப்படும் சில குறிப்பிட்ட திறன்களை அடையாளப்படுத்தி அவற்றினை நிபர்த்தி செய்திடும் ஒரு செயற்பாடாகும். AU Lanka & Child Fund நிதி அனுசரணையில் எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி மற்றும் விவேகானந்த சமூதாய அறக்கட்டளையும் இணைந்து வவுணதீவு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம…

மேலும் படிக்க

கல்வி மற்றும் தகவல் வறுமை…

வறுமை என்பது உணவினால் என்பதனை விட, எமது மாவட்டத்தில் கல்வி மற்றும் தகவல் வறுமையுமே அதிகம் காணப்படுகின்றது. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களிற்கு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு பற்றி தெரியவில்லை,பல்கலைக்கழகங்கள் பற்றிய தெளிவில்லை, மட்டக்களப்பில் திறந்த பல்கலைகக்கழம் இருப்பது தெரியவில்லை, அரசினால் உயர் கற்றலுக்கு மாணவர்களிற்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி தெரியவில்லை, க.பொ.த உயர்தரத்திற்கு பின்னரான அவர்களின் வாழ்க்கை திட்டமிடல் பற்றி தெரியவில்லை.. ஆனால் பல்கலைகழகம் கட்டாயம் செல்வேன் என்று மட்டும் கூறுகின்றனர். உயர்தரத்தில் 3 பாடங்களில்…

மேலும் படிக்க

புத்தாண்டை முன்னிட்டு

புதிய தொடக்கத்தை குறிப்பிடும் புத்தாண்டு தினமானது அறிவு மற்றும் அன்பைக் கொண்டு வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றுகூடி புத்தாடை அணிந்து கோயில் சென்று வழிபாடு செய்வதுடன் ஆரம்பிக்கின்றது. அதற்கிணங்க எமது திட்டங்களினூடாக எம்முடன் இணைந்து பயணிக்கும், இல்லங்களில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் மாணவர்களும் புத்தாண்டை வரவேற்க அவர்களுக்கான புத்தாடைகளை வழங்கி அவர்களை மகிழ்விப்பது எமது கடமையாகும். அந்த வகையில் எமது திட்டப்பிரதேசமான புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜீவானந்தா மகளிர் இல்லம், மயிலம்பாவளி வாழும் கலை நம்பிக்கைக் கிராமம் மற்றும் முல்லைத்தீவு…

மேலும் படிக்க