புத்தாண்டை முன்னிட்டு

புதிய தொடக்கத்தை குறிப்பிடும் புத்தாண்டு தினமானது அறிவு மற்றும் அன்பைக் கொண்டு வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றுகூடி புத்தாடை அணிந்து கோயில் சென்று வழிபாடு செய்வதுடன் ஆரம்பிக்கின்றது. அதற்கிணங்க எமது திட்டங்களினூடாக எம்முடன் இணைந்து பயணிக்கும், இல்லங்களில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் மாணவர்களும் புத்தாண்டை வரவேற்க அவர்களுக்கான புத்தாடைகளை வழங்கி அவர்களை மகிழ்விப்பது எமது கடமையாகும்.

அந்த வகையில் எமது திட்டப்பிரதேசமான புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜீவானந்தா மகளிர் இல்லம், மயிலம்பாவளி வாழும் கலை நம்பிக்கைக் கிராமம் மற்றும் முல்லைத்தீவு அன்னை ஸ்ரீ சாரதா நிலையம் ஆகிய இல்லங்களில் வசிக்கும் மாணவிகளுக்கு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அவர்களுக்கான புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டமுகாமையாளருட்பட சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை சிறப்பானதொரு விடயமாகும்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு கரம் கொடுத்த எமது அறக்கட்டளை உறவுகளாக

வாமதேவன் அமர்நீதி – அமெரிக்கா
பிரபாகர் – அவுஸ்திரேலியா
பத்மநாதன் மற்றும் சிவலோகநாதன் – இலண்டன்
யோசுநாதன் – இலண்டன்
குணரட்ணம் – லண்டன்
விஜயஸ்ரீ விஜயகுமார் – லண்டன்
கோபால் பகீரதன் – கனடா
சு.உதயகுமார் – சுவிஸ்,
அருள்வதி – கம்பளை,
மாவை சிவம் , மிதிலா ஶ்ரீஸ்கந்தஜா, மாலினி குபேந்திரன் , மற்றும் பாஸ்கரமூர்த்தி – ஜேர்மன்

பத்மநாதன் மற்றும் சிவலோகநாதன் – இலண்டன்
யோசுநாதன் – இலண்டன்

ஆகியோர்க்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு தங்கள் இல்லமெங்கும் மகிழ்ச்சி பெருகி வாழ்வு சிறக்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *