தொடரும் பயணங்களில்….துவங்கும் புத்தாண்டு !

குரோதி வருடம் இனிதே பிறந்து விரோதங்கள் இன்றி யாவர்க்கும் நன்மையளித்து வறுமை நீங்கி செம்மையுற்று அனைவரும் செழிப்புடன் வாழ தமிழ்ப்புத்தாண்டாம் சித்திரையை நாம் சிறப்பாக வரவேற்பது எம் தமிழ் மரபு. சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலை நோக்கிய எமது பயணத்தில் அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழப் பிரார்த்திப்பது எமது வழக்காறாகும்.

அந்த வகையில் விவேகானந்த குடும்பத்தினரின் சித்திரைக் கொண்டாட்டமானது மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றதுடன் சமூக நலன்புரியமைப்பின் சேவையாளர்கள், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி புதுக்குடியிருப்பு, கொம்மாதுறை நிலைய சேவையாளர்கள், விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா நிறுவனம் , கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட விவேகானந்த குடும்பத்தின் அனைத்து சேவையாளர்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய விளையாட்டுக்களுடன் பல்வேறு செயற்பாடுகளினூடாக சித்தரைப் புத்தாண்டு தினக் கொண்டாட்டமானது மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டமை சிறப்பானதாகும்.

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் எமது புலம்பெயர் உறவுகள் அனைவரும் சகலமும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திப்பதோடு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக இனிய புதுவருட நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *