அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

முல்லைதீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று 60 மாணவர்களுக்கு விசேட உணவு, பிரத்தியேக வகுப்புகள், விசேட தினங்களுக்கான ஆடைகள் என மாணவர்களுக்கான வலுவூட்டலை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் சாரதா நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் நிதியுதவியுடன் முல்லைத்தீவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.ஜெயகாந்தன் அவர்கள் கலந்து கொண்டதோடு அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் தலைவர், முகாமையாளர், சேவையாளர்கள் உள்ளிட்ட மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவ்வாறான பாரிய செயற்பாடுகளுக்காக தமது நிதி அனுசரணையை வழங்கும் இலண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினருக்கு அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு
இதற்கான மேலதிக உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கும் எமது அறக்கட்டளை உறவுகள் அனைவருக்கும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது மாணவர்களுக்காக சாரதா நிலையத்தை உருவாக்குவதற்கு உங்களால் முடிந்த நிதியுதவியை வழங்க நீங்களும் இன்றே முன்வாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *