அமைப்புகள் பலவாறாயினும் நோக்கம் ஒன்றே !

அமைப்புகள் பலவாறு இருப்பினும் தனிமனித வலுவூட்டலினூடான சமூக மாற்றமே எமது நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும். அதன் பிரகாரம் விவேகானந்த குடும்பத்திலுள்ள அனைத்து நிறுவனங்களுக்குமான காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வானது எமது நிறைவேற்றுப் பணிப்பாளர்.திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா உள்ளிட்ட எமது நிறுவனங்களின் அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் உரிய காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு இக்காலப்பகுதியில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் எமது எதிர்காலத்…

மேலும் படிக்க

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

முல்லைதீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று 60 மாணவர்களுக்கு விசேட உணவு, பிரத்தியேக வகுப்புகள், விசேட தினங்களுக்கான ஆடைகள் என மாணவர்களுக்கான வலுவூட்டலை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சாரதா நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் நிதியுதவியுடன் முல்லைத்தீவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.ஜெயகாந்தன் அவர்கள் கலந்து கொண்டதோடு…

மேலும் படிக்க

தொடரும் பயணங்களில்….துவங்கும் புத்தாண்டு !

குரோதி வருடம் இனிதே பிறந்து விரோதங்கள் இன்றி யாவர்க்கும் நன்மையளித்து வறுமை நீங்கி செம்மையுற்று அனைவரும் செழிப்புடன் வாழ தமிழ்ப்புத்தாண்டாம் சித்திரையை நாம் சிறப்பாக வரவேற்பது எம் தமிழ் மரபு. சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலை நோக்கிய எமது பயணத்தில் அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழப் பிரார்த்திப்பது எமது வழக்காறாகும். அந்த வகையில் விவேகானந்த குடும்பத்தினரின் சித்திரைக் கொண்டாட்டமானது மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றதுடன் சமூக நலன்புரியமைப்பின் சேவையாளர்கள், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி புதுக்குடியிருப்பு, கொம்மாதுறை நிலைய…

மேலும் படிக்க

பன்னிரு அகவை கடந்ததின்று!

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் நெறி நின்று, அவரது கம்பீரமொத்த தோற்றம் கொண்டு, அவர் தம் உருவச்சிலையைத் தமது அடையாளமாகக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் தரம் கண்டு புதுக்குடியிருப்பு நகர் தன்னில் சுவாமியின் நாமத்தைத் தாங்கி நின்று கொண்டிருக்கும் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி இன்று தனது 12 வது அகவை தினத்தை செவ்வனே கடக்கின்றது. எமது கல்லூரியின் ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களின் வழியே எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் முகாமைத்துவத்தில் மிகவும் திறம்பட நடத்தாப்பட்டுக்…

மேலும் படிக்க

நன்கொடையாளரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமூகத்தில் மாற்றத்திற்கான வலுவூட்டலை ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பாலர் பாடசாலைகளுக்கான போசாக்கு உணவு, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, விசேட தினங்களில் பரிசில்கள் மற்றும் சீருடை போன்றவற்றை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் வழங்கிவருகின்றோம். அந்தவகையில் எமது திட்டத்தின் கீழ் இயங்கும் புலிபாஞ்சகல்/மாணிக்கப்பிள்ளையார் பாலர் பாடசாலையில் திருமதி.தாரணி ராம்ராஜ் அவர்களின் பிறந்த தினம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினரால் பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியருடன்…

மேலும் படிக்க

விவேகானந்த குடும்பத்தினரின் இன, மத பேதம் கடந்த பொங்கல் கொண்டாட்டம்

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைத்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்துண்டு நன்றி செலுத்தும் விழாவே பொங்கல் விழாவாகும். அதற்கிணங்க எமது விவேகானந்த குடும்பத்தினரால் இன, மத, பேதங்களின்றி அனைத்து மாணவர்கள் மற்றும் சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் உழவர் திருநாள் இன்றைய தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா நிறுவனம், சமூக நலன்புரி அமைப்பு உள்ளிட்ட அனைத்து சேவையாளர்களும்…

மேலும் படிக்க

சாரதா நிலைய மாணவிகளின் தைத்திருநாள் கொண்டாட்டம்..

உழவர்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்துழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியைத் தெரிவிக்கும் நாளே தைப்பொங்கல் தினமாகும். இந்நாள் உலகெங்கிலுமுள்ள தமிழர்களால் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் வெகு விமரிசையாக பொங்கல் விழா அனுஷ்டிக்கப்பட்டது. அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் முகாமையாளர் உள்ளிட்ட அனைத்து சேவையாளர்களும், சாரதா நிலைய மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இம்மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டமை சிறப்பானதாகும். இதற்கான அனுசரணையை…

மேலும் படிக்க